அகத்திணையியல்-நூற்பா-21                               161


 

  கவ்வை உரைத்தலும் கனவுஅவள் உரைத்தலும்
  வரைதல் வேட்கையொடு வந்தவும் பிறவும்
  உரைதரு பெருமையோடு உரைத்தனர் பலரே.

  "இறைச்சிப் பொருள்வகை திறப்படத் தெரியின்
  அங்கியல் பொருளே திணைநிலைப் பொருளே
  வன்புலப் பொதுப்பொருள் மென்புலப் பொதுப்பொருள்
  பெருமைப் பொதுப்பொருள் விருந்துப்பொதுப் பொருளென
  இருமூன்று என்பர் தெரிநூற் புலவர்".

     அவற்றுள், அங்கியற் பொருளாவது அந்நிலத்தின் அங்கமாம் பொருள்
 எனக்கொள்க. அவையாவன: குறிஞ்சி நிலத்துச் சந்தனமும் பொன்னும்
 வெள்ளியும் முதலிய; நெய்தல் நிலத்து உப்பும் இப்பியும் நந்தும் அலவனும்
 வலையும் முதலிய; பாலைநிலத்துச் சீழ்குநாயும் குருவியும் சிள்வீடும்
 அறுபுள்ளியும் கோம்பியும் முதலாயுள்ளன; மருத நிலத்துக் கரும்பு வாழை
 தெங்கு முதலாயுள்ளன; முல்லை நிலத்துப் பூவையும் பூனையும் தும்பியும்
 காவளையும் கார்போகியும் முதலாயுள்ளன.

     திணைநிலைப்பொருள் 92-96 நூற்பாக்களில் சொல்லப்பட்டன. இனி,
 வன்புலப் பொதுப்பொருளும் மென்புலப் பொதுப்பொருளும்
 பெருமைப்பொதுப்பொருளும் விருந்துப் பொதுப்பொருளும் ஆமாறு:

     "ஆரே புன்கை அரசு உழிஞ்சில்
     காரை பருத்தி கரும்பே முதலா
     வன்புலப் பொருள்என நன்குஉரைத் தனரே".
     "கீரை வழுதுணை கிடையே சணப்பே
     வேரிதணக்கு அந்தம் மருதம் முதலன
     மென்புலப் பொருள்என நன்குஉரைத் தனரே".
     "தாளியும் பூவலும் நாவலும் கழஞ்சும்

     21