162                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     வேலியும் மாறும் பதடியும் கோரையும்
     சூரையும் சுரையும் சுரும்பும் வண்டும்
     துவரையும் அகத்தியும் ஐம்பெரு முதிரையும்
     காணுங் காலைத் திணைதொறும் காணப்
     பேணினர் என்மனார் பெருமைப் பொதுப்பொருளே".
     "ஒருதிணைக்கு உரியன ஒருதிணைச் சேரின்
     விரிநூல் புலவர் விருந்துஎன் றனரே".                      29

     இத்துணையும் ஐந்திணைபற்றி வீரசோழிய உரைவிளம்புவன.

     இனி, இவ்வைந்திணைக் கருப்பொருள்பற்றித் தொல்காப்பியப்
 பொருட்படல 20ஆம் நூற்பா உரையில் உரையாசிரியர் கூறுவன:

     குறிஞ்சிக்குத் தெய்வம் முருகவேள். மைவரை உலகமும் கூதிர்க்காலமும்
 அதனிடை நள்ளிருளும் கூறினமையான், அந்நிலத்தினும் காலத்தினும் நிகழ்
 பவை கொள்க. உணவு-தினையும் ஐவனமும் வெதிர்நெல்லும். மா-யானையும்
 புலியும் பன்றியும் கரடியும். மரம்-வேங்கையும் கோங்கும். புள்-மயிலும்
 கிளியும், பறை-வெறியாட்டுப்பறையும் தொண்டகப்பறையும். செய்தி-தேன்
 அழித்தல். பண்-குறிஞ்சி "பிறவும்" என்றதனால், பூ-வேங்கைப் பூவும் காந்தட்
 பூவும் குறிஞ்சிப் பூவும்; நீர் சுனை நீரும் அருவி நீரும். பிறவும் அன்ன.

     பாலைக்குத் தெய்வம் கொற்றவை. உணவு-ஆறலைத்தலான் வரும்
 பொருள், விளைபொருள் இன்மையான். மா-வலி அழிந்த யானையும், வலி
 அழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம்-பாலை, இருப்பை, கள்ளி,
 சூரை. புள்-எருவையும் பருந்தும். பறை-ஆறலைப் பறையும் சூறை கொண்ட
 பறையும். செய்தி-ஆறலைத்தல். பண்-பாலை. "பிறவும்" என்றதனால், பூ-
 மராம்பூ; நீர்-அறுநீர்க் கூவலும் அறுநீர்ச்சுனையும். பிறவும் இந்நிகரன
 கொள்க.