166                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     உரிப்பொருட்கு உரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப் பெயரும்
 நாட்டாட்சிபற்றி வரும் பெயருமாம். குறிஞ்சிக்கு வெற்பன் சிலம்பன்
 பொருப்பன் கொடிச்சி. பாலைக்கு மீளி விடலைகாளை. முல்லைக்கு
 அண்ணல் தோன்றல் குறும்பொறை நாடன் மனைவி. நெய்தற்குக்
 கொண்கன் துறைவன் சேர்ப்பன் மெல்லம்புலம்பன். மருதத்திற்கு மகிழ்நன்
 ஊரன் மனையோள்.                                            21

திணை மயக்கம்

 393 முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
      மரபின் வாராது மயங்கலும் உரிய.

     இது முதற்பொருள் முதலிய மூன்றற்கும் ஆவது ஒரு புறனடை
 கூறுகின்றது, தமக்கு உரியவற்றோடன்றிப் பிறவற்றோடும் மயங்கும்
 என்றலின்.

     இ-ள் :முதல் கரு உரி என்னும் மூன்று கூற்றவாகிய பொருளும்
 தமக்குத்தமக்கு உரிய திணையொடுகூடி இலக்கண முறையானே வாராது
 பிறவற்றிற்கு உரிய திணையொடு கூடி மயங்கி வருதலும் உரியவாம் எ-று.

     "மரபின் வாராது" என்ற மிகையானே, நிலம் என்னும் முதற் பொருள்
 ஒழித்து ஏனையவே மயங்கி வரும் எனக் கொள்க.

   வரலாறு:

     கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்
     இருபுலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
     எல்லி வருநர் களவிற்கு
     நல்லை அல்லை நெடுவெண் நிலவே.                (குறுந். 47)

    இக் குறுந்தொகையுள் பாலைக்கு உரிய வேனில் வந்த தூஉம்,