அகத்திணையியல்-நூற்பா-22                               167


 

     தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
     நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
     மணம்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
     அணங்குஎன அஞ்சுவர் சிறுகுடி யோரே.               (கலி. 52)

     

   இப்பாட்டினுள் மருதத்திணைக்கு உரிய தாமரைப்பூ வந்ததூஉம்,

     அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ
     பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
     சாந்தம் நாறும் நறியோள்
     கூந்தல் நாறும்நின் மார்பே தெய்யோ.                (ஐங். 240)

     எனப் "புறத்துஒழுக்கம் இன்று" என்றாற்குத் தோழி கூறிய
 இவ்வைங்குறுநூற்றுள் ஊடல் வந்ததூஉம்முறையே குறிஞ்சித் திணையோடு
 முதற்பொருள் முதலியமூன்றும் மயங்கி வந்தன.

     அம்ம வாழி தோழி சிறியிலைக்
     குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய
     வாவல் உகக்கும் மாலையும்
     இன்றுகொல் காதலர் சென்ற நாட்டே.                (ஐங். 339)

     என இவ்வைங்குறுநூற்றுள் முல்லைத்திணைக்கு உரிய மாலை
 வந்ததூஉம்,

 கல்மிசை மயில்ஆலக் கறங்கிஊர் அலர்தூற்றத்
 தொன்னலம் நனிசாய நம்மையோ மறந்தைக்க
 ஒன்னாதார்க் கடந்துஅடூஉம் உரவுநீர் மாகொன்ற
 வென்வேலான் குன்றின்மேல்விளையாட்டும் விரும்பார் கொல்                                                         (கலி-27)

 என இப்பாலைக்கலியுள் குறிஞ்சித்திணைக்கு உரிய மயில் வந்ததூஉம்,