அகத்திணையியல்-நூற்பா-22                               169


 

     நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து
     ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப்
     பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக்
     கூதிர்நின் றற்றால் பொழுதே காதலர்
     நம்நிலை அறியார் ஆயினும் தம்நிலை
     அறிந்தனர் கொல்லோ தாமே ஓங்குநடைக்
     காய்சின யானை கங்குல் சூழ
     அஞ்சுவர இறுத்த தானை
     வெஞ்சின வேந்தன் பாசறை யோரே.               (அகநா. 264)

 எனப் பருவம் கண்டு வன்புறை எதிர்அழிந்து தலைவி தோழிக்குக் கூறிய
 இம்மணிமிடைபவளத்துள் கூதிர் வந்ததூஉம்,

     மங்குல் மாமழை விண் அதிர்பு முழங்கித்
     துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப்
     புள்ளிநுண் துவலை பூஅகம் நிறையக்
     காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
     நீர்வார் கண்ணில் கருவிளை மலரத்
     துய்த்தலைப் பூவின் புதல்இவர் ஈங்கை
     நெய்த்தோய்த் தன்ன நீர்நனை அந்தளிர்
     இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர
     அவரைப் பைம்பூப் பயில அகல்வயல்
     கதிர்வார் காய்நெல் கட்குஇனிது இறைஞ்சச்
     கிதர்சினைத் தூங்கும் அற்சிர அரைநாள்
     காய்சின வேந்தன் பாசறை நீடி
     நம்நோய் அறியா அறனி லாளர்
     இந்நிலை களைய வருகுவர் கொல்என
     ஆனாது எறிதரும் வாடையொடு
     நோனேன் தோழிஎன் தனிமை யானே.             (அகநா. 294)

     22