176                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

      ஐந்திணையோடு
      ஏனைத்திணை உரிப்பொருள் மயக்கம்

 395 ஒருதலைக் காமமும் ஒவ்வாக் காமமும்
     விரவியும் வரூஉம் மரபின என்ப

     இஃது எய்தாதது எய்துவிக்கின்றது, கைக்கிளை பெருந்திணைக்கு உரிய
 உரிப்பொருளும் இவற்றோடு மயங்கும் என்றலின்,

     இ-ள் கைக்கிளைத்திணைக்கு உரிய ஒருதலைக்காமம் என்னும்
 உரிப்பொருளும், பெருந்திணைக்கு உரிய பொருந்தாக்காமம் என்னும்
 உரிப்பொருளும் குறிஞ்சித்திணை முதலிய ஐந்திணையோடும் மயங்கியும்
 வரும் இயல்பை உடையன என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

     வரலாறு: "ஊர்க்கால் நிவந்த" (கலி 56) என்னும் குறிஞ்சிக் கலியுள்,

     "ஆய்தூவி அனமென அணிமயில் பெடையெனத்
      தூதுஉண்அம் புறவுஎனத் துதைந்தநின் எழில்நலம்
      மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
      பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ".

 எனக் குறிஞ்சித்திணையோடு கைக்கிளையும்,

      "எழில்மருப்பு எழில்வேழம் இகுதரு கடாத்தால்
      தொழில்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்கு
      அறிவும்நம் அறிவுஆய்ந்த அடக்கமும் நாணொடு
      வறிதாகப் பிறர்என்னை நகுபவும் நகுபுஉடன்
      மின்அவிர் நுடக்கமும் கனவும்போல் மெய்காட்டி
      என்நெஞ்சம் என்னோடு நில்லாமை நனிவௌவித்
      தன்நலம் கரந்தாளைத் தலைப்படுமாறு எவன்கொலோ
      மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை