இது, நிறுத்த முறையானே களவில் புணரும் புணர்ச்சி இத்துணைத்து
என்கின்றது.
இ-ள்:இயற்கைப் புணர்ச்சியும் அப்புணர்ச்சி நிகழ்ந்த நிலைக்களத்தைப்
பின்னர்த் தலைப்பெய்து புணரும் புணர்ச்சியும் பாங்கனால் புணரும்
புணர்ச்சியும் பாங்கியால் புணரும் புணர்ச்சியும் என முற்கூறிய களவு
என்னும் கைகோளின் புணர்ச்சி நான்கு வகையினை உடைத்தாம் என்றவாறு. 25