184                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

களவிற் புணர்ச்சிக்கு ஒழிபு

 403 உள்ளப் புணர்ச்சியும் மெய்உறு புணர்ச்சியும்
     கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய.

     இது, மேற்கூறிப்போந்த களவிற் புணர்ச்சிக்கு எய்தியது ஓர்ஒழிபு
 கூறுகின்றது.

     இ-ள் : உள்ளத்தால் புணரும் புணர்ச்சியும் மெய்யுற்றுப் புணரும்
 புணர்ச்சியும் என்னும் இருகூற்றுப் புணர்ச்சியும் களவு என்னும்
 கைகோளின்கண் புணரும் புணர்ச்சிக் கண் காதலைஉடைய தலைவற்கும்
 தலைவிக்கும் உரியவாம் என்றவாறு.                               31

 விளக்கம்

     மேற்கூறிப்போந்த 29ஆம் நூற்பாச் செய்தி.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்                                           ந. அ. 34

                                                             31

 உள்ளப்புணர்ச்சிக்கு ஏது

 404 பொருஇறந் தோற்குப் பெருமையும் உரனும்
      நன்னுதற்கு அச்சமும் நாணும் மடனும்
      மன்னிய குணங்கள் ஆதலின் முன்னர்
      உள்ளப் புணர்ச்சி உரியது ஆகும்.

     மேற்கூறிய இருகூற்றுப் புணர்ச்சியுள் இஃது உள்ளப் புணர்ச்சி முன்
 நிகழ்தற்கு ஏது கூறுகின்றது.

     இ-ள் : நிகர்இல்லாத தலைமகற்குப் பெருமையும் உரனும் நன்னுதலை
 உடையள் ஆகிய தலைமகட்கு அச்சமும் நாணும் மடனும் நிலைபெற்ற
 குணங்கள் ஆதலின், மேல் கூறிப்போந்த இருகூற்றுப் புணர்ச்சியுள்ளும்
 உள்ளப் புணர்ச்சி முன் நிகழ்வதற்கு உரித்தாம் என்றவாறு.