186                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 ஆற்றிய பகுதியில் சென்ற உள்ளம் மீட்டலும் மேம்பட்ட தலைவற்கு உரிய
 எனக்கொள்க. தலைவி அச்சமும் நாணும் மடனும் உடையள் எனவே,
 தலைவன் பெருமையும் உரனும் உடையனாய் வேட்கை மீதூரவும்
 பெறுமாயிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப்புணர்ச்சிக்கு
 உரியள் அல்லளாம் ஆயினும், இவ்விலக்கணத்துள் திரியாது நின்றேயும்
 புணர்ச்சிக்குஉரியளாம் என்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடும் கூறினார்"
 என்றும்  நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்த நூற்பாக்கள்

     "பெருமையும் உரனும் ஆடூஉ மேன".             தொல். பொ.98
                                                   மு. வீ. கள. 3

     "அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
     நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப".             தொல். பொ. 99
                                                                                  மு.வீ.கள.4     முழுதும்                                            ந. அ. 35

                                                             32

 மெய்யுறுபுணர்ச்சி நிகழும் காலம்

 405 காட்சி வேட்கை உள்ளுதல் மெலிதல்
     ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
     நோக்குவ எல்லாம் அவையே போறல்
     மறத்தல் மயக்கம் சாக்காடு என்ற
     ஐயிரண்டு அவத்தையும் பெய்கழல் காளையும்
     புகுமுகம் புரிதல் முதல ஆகிக்
     காட்சிமுதல் மூன்றையும் கருதிநந் நான்காய்
     ஆட்சியின் அமைந்தஈ ராறுமெய்ப் பாடும்
     முருந்துஇள முறுவலும் பொருந்துதல் உறினே
     மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே.

    இது மெய்யுறு புணர்ச்சி நிகழும் காலம் உணர்த்துகின்றது.