இது, மேல் கூறிப்போந்த புணர்ச்சி நிகழும் இடம் இத்துணைப்
பகுதித்து எனவும், அப்பகுதிகள் இவ்வியல்பின எனவும் கூறுகின்றது.
இ-ள் : பகற்குறியும் இரவுக்குறியும் என்னும் பகுதியை உடையவாம்,
அன்பான் அமைந்தோர் புணர்ச்சி நிகழும் இடங்கள். அவற்றுள், இல்லின்
எல்லையைக் கடந்தது பகற்குறியாம்; இரவுக்குறி அதனைக் கடவாத
இயல்பினை உடைத்தாம் என்றவாறு.