இது மேலைச் சூத்திரத்துள் தோற்றுவாய் செய்யப்பட்ட வரைவு நிகழும்
இடம் கூறுகின்றது.
இ-ள் : களவு வெளிப்படா முன்னும் களவு வெளிப்பட்ட பின்னும்
வரைவு நிகழும் நெறியினை உடைத்தாம் என்று சொல்லுவர் அறிவுடையோர்
என்றவாறு.
வெளிப்படாமுன்னும் என்பதனால் வெளிப்பட்டபின்னும் எனத் தந்து
உரைக்கப்பட்டது. 38