அகத்திணையியல்-நூற்பா-42,43                            197


 

     இது மீண்டுவரைதலின் வகை உணர்த்துகின்றது.

     இ-ள் தலைமகள்மனையின்கண்ணே வரைதலும் தலைமகன் மனையின்
 கண்ணே வரைதலும் என இரண்டு வகையினை உடைத்தாம், உடன்போய்
 மீண்டு தம் ஊரின் கண்ணே வரைதல் என்றவாறு.                   42

ஒத்த நூற்பா

     முழுதும்-                                          ந. அ. 46
                                                            42

அறத்தொடுநிலை தோன்றும் இடம்

 415 ஆற்றுஊறு அஞ்சினும் அவன்வரைவு மறுப்பினும்
     வேற்றுவரைவு நேரினும் காப்புக் கைமிகினும்
     ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே.

     இது மேல்கூறிய வரைவிற்கு நிமித்தம் கூறுகின்றது.

     இ-ள் தலைமகன் வருவழி ஏதத்தினை அஞ்சிய இடத்தும், தமர்
 அவன்வரைவு எதிர்கொள்ளாத இடத்தும், பிறர் வரைவு நேரும் இடத்தும்,
 காவல் கைமிகுந்த இடத்தும் நெறிப்படப் புலப்படும் அறத்தொடுநிலை
 என்றவாறு.

     அறத்தொடுநிலை-அறத்தொடு மாறுகொள்ளாத நிலை.            43

விளக்கம்

     அறத்தொடுநிலை-தக்கதனைச் சொல்லிநிற்றல், கற்பின் தலை
 நிற்றல் என்பதும் ஆம்.

ஒத்த நூற்பாக்கள்

     "காப்புக்கை மிக்குக் காமம் பெருகினும்,
     நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்,
     வரைவுஎதிர் கொள்ளாது தமர்அவண் மறுப்பினும்,
     அவன்ஊறு அஞ்சும் காலம் ஆயினும்,