198                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     அந்நாலிடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ,
     அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே"                                                    இறை. கள. 29
     முழுதும.்-                                          ந. அ. 47

                                                             43

அறத்தொடு நிற்கும் முறை

 416 தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்
     பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும்
     செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்
     ஒற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு
     நிற்கும் என்ப நெறிஉணர்ந் தோரே.

     இஃது இவர் இவர்க்கு அறத்தொடுநிற்றற்கு உரியர் என்கின்றது.

     இ-ள் தலைவி முதலிய நால்வரும் பாங்கி முதலிய நான்கு
 திறத்தார்க்கும் முறையே அறத்தொடுநிற்றற்கு உரியர் என்று சொல்லுவர்
 அகப்பொருள் இலக்கணம் அறிந்தோர் என்றவாறு.                   44

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்.-                                          ந. அ. 48

                                                             44

தலைவி அறத்தொடு நிற்கும் காலம்

 417 ஒருபுணர் ஒழிந்தவற்று ஒருவழித் தணப்பவும்
     வரைவுஇடை வைத்துப் பொருள்வயின் பிரியவும்
     இறைவனைச் செவிலி குறி வயின் காணவும்
     மனைவயின் செறிப்பவும் வருத்தம் கூரின்
     வினவியக் கண்ணும் வினவாக் கண்ணும்
     அனநடைக் கிழத்தி அறத்தொடு நிற்கும்.