இது தலைவி அறத்தொடு நிற்கும் காலம் உணர்த்துகின்றது.
இ-ள் பாங்கியிற்கூட்டம் ஆகியஒன்று நீங்கியஏனை இயற்கைப்
புணர்ச்சி முதலாய மூன்று புணர்ச்சிக்கண்ணும் தலைவன்
ஒருவழித்தணத்தலானும், வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலானும்,
தலைவனைச் செவிலி குறியிடத்துக் காண்டலானும், மனையிடத்துச்
செறித்தலானும் தனக்கு வருத்தம் மிகுமாயின், தன்னைப் பாங்கி வினவிய
இடத்தும் வினவாத இடத்தும் தலைவி அவட்கு அறத்தொடு நிற்கும்
என்றவாறு. பாங்கி என்பது அதிகாரத்தான் வந்தது. 45