கத்திணையியல்-நூற்பா-47,48                              201


 

செவிலி அறத்தொடு நிற்குமாறு

 419 செவிலி நற்றாய்க்குக் கவலையின்று உணர்த்தும்.

     இது செவிலி அறத்தொடு நிற்கும் திறம் கூறுகின்றது.

     இ-ள் செவிலி அறத்தொடு நிற்கும் காலத்து நற்றாய்க்கு விளங்க
 அறிவிக்கும் என்றவாறு.                                                             47

ஒத்த நூற்பாக்கள்

     "தாய்அறி வுறுதல் செவிலியோடு ஒக்கும்".      தொல். பொ. 138

     முழுதும்-                                          ந. அ. 51

                                                            47

நற்றாய் அறத்தொடு நிற்றல்

 420 நற்றாய் அறத்தொடு நிற்குங் காலைக்
     குரவனும் தன்னையும் குறிப்பின் உணர்ப.

     இது நற்றாய் அறத்தொடுநிற்கும் திறம் கூறுகின்றது.

     இ-ள் நற்றாய் அறத்தொடு நிற்குங் காலத்துச் சொல்லாடப் பெறாள்
 ஆகலின், தலைமகள்தந்தையும் தன்னையும் அவள் குறிப்பினானே அறிவர்
 என்றவாறு.                                                             48

ஒத்த நூற்பாக்கள்

     "தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப."  தொல். பொ. 137

     முழுதும்-                                          ந அ. 52

                                                            48

     26