202                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

அறத்தொடு நிற்பார் வினாவுமிடம்

 421 பாங்கி தலைவியை வினவும் செவிலி
     பாங்கியை வினவும் பாங்கி தன்னையும்
     நற்றாய் தானும் வினவும் செவிலியின்
     பொற்றொடிக் கிழத்தியை உற்று நோக்கின்.

     இஃது அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் கூறுகின்றது.

     இ-ள் தலைமகள்மாட்டு வேறுபாடு கண்டுழிப்பாங்கி முதலாகிய
 மூவரும் இவ்வாறு வினவப் பெறுவர் என்றவாறு.

     "பாங்கி தன்னையும் நற்றாய் தானும்" என்ற உம்மைகள் முறையே
 "நற்றாய் செவிலியை வினவுதலும் பாங்கியைச் செவிலி வினவுதலும் அன்றி"
 என்னும் பொருள்படநின்றன. இவ்வாறு நற்றாய் வினாவுவது செவிலியைப்
 போலத் தலைமகளை உற்றுப்பார்த்த இடத்து எனக்கொள்க.            49

          முழுதும்-                                      ந அ. 53

49

உடன்போயவழி அறத்தொடுநிலை

 422 ஆங்குஉடன் போயுழி அறத்தொடு நிற்ப
     பாங்கியும் செவிலியும் பயந்த தாயும்.

     இஃது அறத்தொடுநிலை முறையான் அன்றி ஒருங்கு நிகழும் இடம்
 கூறுகின்றது.

     இ-ள் தலைமகளும் தலைமகனும் புணர்ந்து உடன் போய காலத்து
 அறத்தொடுநிற்பர் தோழியும் செவிலியும் நற்றாயும் என்றவாறு.