204                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இ-ள் : கற்பு என்னும் கைகோள்இடத்துப் புணரும் புணர்ச்சி குரவரால்
 புணரும் புணர்ச்சியும்,

     வாயில்களால் புணரும் புணர்ச்சியும் என இரண்டு பகுதியினை
 உடைத்து என்றவாறு.

     குரவரின் புணர்ச்சி வதுவை கூட்டிப்புணரும் புணர்ச்சி; வாயிலின்
 கூட்டம் புலவி தீர்த்துப் புணரும் புணர்ச்சி.

ஒத்த நூற்பா

     முழுதும்-                                           ந. அ. 56
                             

52

 களவின்வழிவரு கற்பிற்குச் சிறப்புவிதி

     அவற்றுள்,

 424 களவின் வழிவந்த கற்பின் புணர்ச்சி
     கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
     உடன்போய் வரைதலும் உண்மை யான.

     இது களவின்வழி வந்த கற்பின்புணர்ச்சிக்கு எய்துவது ஒரு
 வேறுபாடு உணர்த்துகின்றது.

     இ-ள் : மேல் சொல்லப்பட்ட இருவகைக் கற்பினுள்ளும் களவின்
 வழிவந்த கற்பினுள் புணரும் புணர்ச்சி, தலைமகள் சுற்றத்தாரால்
 பெறப்படாத கோட்பாட்டினையும் உடைத்தாம், புணர்ந்து உடன்போய்த்
 தலைமகன் தன்ஊரின் கண்ணே வரைந்துகோடலும் உண்டு ஆதலான்
 என்றவாறு.

     "கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
     புணர்ந்துஉடன் போகிய காலை யான"       தொ. பொ.      143
                                                             53

     என்ப ஆகலின்,                                           53

ஒத்த நூற்பா

     "கொடுப்போர் ....... ........ ......... காலையான."                   " 143
     முழுதும்-                                           ந. அ. 57
                                                             53