426 மறையின் புணர்ச்சியும் மன்றல் புணர்ச்சியும்
இறைவற்கு எய்தல்உண்டு இருவகைக் கற்பினும்.
இது தலைமகற்குக் கற்புக்காலத்து நிகழும் புணர்ச்சி வேறுபாடு
கூறுகின்றது.
இ-ள் : மேல் சொல்லிய இருவகைக் கற்பின்கண்ணும் தலைமகற்குக்
களவிற்புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் பொருந்துதல் உண்டு
என்றவாறு. 54
427 காதற் பரத்தையர் காமக் கிழத்தியர்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்திஎன்று
அன்னவர் உரியர் அவைஇரண் டற்கும்,
இஃது அவ் விருவகைப் புணர்ச்சிக்கும் உரிய மகளிர் இவர் என்கின்றது.
இ-ள் : காதற்பரத்தையர் முதலாகிய மூவகையோரும் தலைமகன்
அவ்வாறு புணரும் புணர்ச்சி இரண்டற்கும் உரியர் என்றவாறு. 55