206                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

களவிற்கு உரியார்

     அவருள்,

 428 காதல் பரத்தையர் களவிற்கு உரியர்.

     இது களவிற்கு உரிய மகளிர் இவர் என்கின்றது.

     இ-ள் : மேல் சொல்லப்பட்ட மூவகையோருள்ளும் காதல் பரத்தையர்
 களவின்புணர்ச்சிக்கு உரியர் என்றவாறு.                            56

ஒத்த நூற்பா

     முழுதும்-                                             ந.அ.60

56

திருமணத்திற்கு உரியார்

 429 ஒழிந்தோர் மன்றல் புணர்ச்சிக்கு உரியர்.

     இது வதுவைப் புணர்ச்சிக்கு உரிய மகளிர் இவர் என்கின்றது,

     இ-ள் : காமக்கிழத்தியும் பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியும்
 ஆகிய இருதிறத்தோரும் வதுவைப்புணர்ச்சிக்கு உரியர் என்றவாறு.57

 
ஒத்த நூற்பா

    முழுதும்-                                              ந.அ.61

57

   
கற்புக்காலப் பிரிவுகள்

 430 பரத்தையின் பிரிதல் ஓதற்குப் படர்தல்
     அருள்தரு காவலொடு தூதிற்கு அகறல்,
     உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல்என்று
     உரைபெறு கற்பின் பிரிவுஅறு வகைத்தே.

       

  இது கற்பின் பிரியும் பிரிவுவரையறை உணர்த்துகின்றது.


     இ-ள் : பரத்தையிற் பிரிதல் முதலாக நிதியிற்கு இகத்தல் ஈறாக
 அறுவகையினை உடைத்தாம் கற்பின்கண் பிரியும் பிரிவு என்றவாறு.     58