அகத்திணையியல்-நூற்பா-70,71                             215


 

நாடு காவல்

 442 மற்றைக் காவல் கொற்றவர்க்கு உரித்தே.

     இது பின்னையதற்கு உரிமை கூறுகின்றது.

     இ-ள் : ஏனை நாடுகாத்தற்குப் பிரியும் பிரிவு அரசர்க்கு உரித்து
 என்றவாறு.                                                   70

ஒத்த நூற்பாக்கள்

     "மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
     முல்லை முதலாச் சொல்லிய முறையால்
     பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
     இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே."       தொல். பொ. 28

     "மன்னர் பாங்கில் பின்னோரும் ஆகுப"                "" "" 30

     "ஏனைக் காவல் இறைவர்க் குரிய"               மூ. வீ. அக. 48

     "அரசர் அல்லா ஏனை யோர்க்கும்
     புரைவது என்ப ஓரிடத் தான."                   இறை. கள. 38

                                                             70

தூதிற்கு உரிமை

 443 வேத மாந்தர் வேந்தர்என்று இருவர்க்கும்
     தூது போதல் தொழில்உரித்து ஆகும்.

     இது, நிறுத்த முறையானே தூதிற்குப் பிரியும் பிரிவுக்கு உரியார் இவர்
 என்கின்றது.

     இ-ள் : அந்தணரும் அரசரும் என்னும் இருதிறத்தாருக்கும்
 தூதுநிமித்தம் பிரியும் பிரிவுதொழில் உரித்து என்றவாறு.

வரலாறு:

     வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
     உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
     எல்லி வந்து நில்லாது புக்குச்