அகத்திணையியல்-நூற்பா-74,76                             219


 

     "பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே." தொல். பொ. 33

     "பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
     நிலத்திரிபு இன்று அஃது என்மனார் புலவர்"              " 224

     "வேந்தர்க்கு உற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்று
     ஆங்க இரண்டும் இழிந்தோர்க்கு உரிய"           இறை. கள. 39

     "காதல் பரத்தை நால்வர்க்கும் உரித்தே"         தொல். பொ. 40

     முழுதும்.-                                          ந. அ. 78

74

திணை மக்கட்குரிய பிரிவுகள்

 447 இழிந்தோர் தமக்கும் இவற்றுள்மேம் பட்டவை
      ஒழிந்தன வாம்என மொழிந்தனர் புலவர்.

     இது நிலமக்களுள் தலைமக்கட்கு உரியன கூறுகின்றது.

     இ-ள் : இவ்வறுவகைப் பிரிவுள்ளும் மேம்பட்டனவாகிய ஓதலும் நாடு
 காவலும் தூதுபோதலும் ஆகிய மூன்றும் ஒழித்து அல்லாதன எல்லாம்
 ஒழிந்தோர்ஆகிய நிலமக்களுள் தலைமக்கட்கு உரியவாம் எனச் சொல்லுவர்
 அறிவோர் என்றவாறு.                                          75

விளக்கம்

     நிலமக்களுள் தலைமக்கள் - பொருப்பன், விடலை, குறும்
 பொறைநாடன், ஊரன், சேர்ப்பன் போல்வார். செய்யுளுள் இவர்களே
 பெரும்பாலும் தலைவராக வருதலைக் காண்கிறோம்.

ஒத்த நூற்பா

     முழுதும்.-                                          ந. அ. 79

                                                             75

தலைமகன் பிரியும் திறன்
 

 448 கல்வி முதலா எல்லா வினைக்கும்
     சொல்லி அகறலும் சொல்லாது அகறலும்
     உரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு.