அகத்திணையியல்-நூற்பா-78,80                            221


 

ஒத்த நூற்பா

     "செய்பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும்
     எய்த உணர்த்தும் கிழவிபா ராட்டே            தொல். பொ. 232

     முழுதும் -                                          ந. அ. 82
                                                                                  78

பிரிதற்கண் பொதுஇயல்பு

 451 காலில் சேறலும் கலத்தில் சேறலும்
     ஊர்தியில் சேறலும் நீதி ஆகும்.

     இது பிரியுங்காலத்து நால்வர்க்கும் பொதுஆவது ஓர் இயல்பு
 உணர்த்துகின்றது.

     (இ-ள்) காலிற்போதல் முதலாகிய மூன்றும் எல்லாப் பிரிவின்கண்ணும்
 எல்லார்க்கும் இயல்பாம் என்றவாறு.                               79

ஒத்த நூற்பா

     முழுதும்-                                                       ந. அ. 83
                                                             79

அந்தணர்க்கு ஆகாத பிரிவு

 452 புலத்தில் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக்
     கலத்தில் சேறல் கடன்அன்று என்ப.

     இஃது அந்தணர்க்கு ஆகாதது ஓர்இயல்பு கூறுகின்றது.

     இ-ள் : காலில்சேறல் முதலாகிய மூன்றனுள்ளும், கலத்தில்சேறல்
 அறிவினான்மிக்க அந்தணர்க்கு முறைமை அன்று என்று சொல்லுவர்
 புலவர் என்றவாறு.                                             80

விளக்கம்

     கலத்தில் போங்கால் செலவு பன்னாட்கு ஆகும். ஆதலின், நாடோறும்
 செய்யும் இறைவழிபாடு முட்டுப்படுதலின் கலத்தில்சேறல் அந்தணர்க்கு
 ஆகாது என்றவாறு.