222                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பா

     முழுதும்-                                           ந அ. 84

                                                             80

அரசர் முதலியோர்க்கு ஆகாத இயல்பு

 453 வலன்உயர் சிறப்பின் மற்றைமூ வர்க்கும்
     குலமட மாதரொடு கலமிசைச் சேறலும்
     பாசறைச் சேறலும் பழுதுஎன மொழிப

.

     இஃது அரசர் முதலாகிய மூவர்க்கும் ஆகாதது ஓர் இயல்பு கூறுகின்றது.

     இ-ள் குலமட மாதரொடு கூடக் கலம்மிசைக் சேறலும் பாசறைக்கண்
 சேறலும் ஆகிய இரண்டும் வெற்றிஉயர் சிறப்பினை உடைய வேந்தர்
 முதலாகிய மூவர்க்கும் குற்றம் என்று சொல்லுவர் கற்றுவல்லோர் என்றவாறு.

     மணம்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
     கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள்            (சிலப். வஞ்சின67)

 எனவும்,

     பனிஇருங் கங்குலும் தமியள் நீந்தித்
     தம்மூ ரோளே நன்னுதல் யாமே . . .
     இரவுத்துயில் மடிந்த தானை
     உரவுச்சின வேந்தன் பாசறை யேமே                (அகநா- 24)

 எனவும் வருவனவற்றான், முறையே குலமடமாதரொடு கலம் மிசைச்
 செல்லாமையும் பாசறைக்கண் செல்லாமையும் அறிக. "குலமடமாதரொடு
 செல்லார்" எனவே, பரத்தையரோடு செல்வார் என்பதுபெற்றாம்.

     துயில்இன்றி யாம்நீந்தத் தொழுவையம் புனல்ஆடி
     மயில்இயலார் மருவுண்டு மறந்துஅமைகு வான்மன்னோ
     வெயில்ஒளி அறியாத விரிமலர்த் தண்காவில்
     குயில்ஆலும் பொழுதுஎன்னக் கூறுநர் உளராயின்       (கலி. 30)