அகத்திணையியல்-நூற்பா-83                              225


 

 தொழுது வணங்கி மணங்கமழ்தார் பெய்து தொய்யில்மெய்யில்
 எழுதி முயங்கி மயங்கினம் ஆக இருங்கயற்கண்
 அழுது சிவந்து பசந்தது நாம்இங்(கு) அகலுவமேல்
 பழுது சிறந்து விடும்தனி ஆவிப் பணிமொழிக்கே.        (அம்பி. 548)

 எனவும்,

 சென்றே வினைமுற்றி மீளுவது அன்றெனில் தேர்ந்திதனை
 அன்றே தவிர்தல் அன்றோஅறி வோர்தொழில் ஆரழல்திண்
 குன்றே நெருங்கும் கொடுஞ்சுரத்து என்னையும் கொண்டுவந்து
 நின்றே வருந்தும்நெஞ் சேஎன்செய் வேன்இந் நிலைதனக்கே.
                                                     (அம்பி. 550)

 எனவும் இவைமுறையே ஒருங்குவருதலும் தனித்தனி வருதலும் காண்க.   83

விளக்கம்

     "புணரின் புணராது" -

     தலைமகளோடு உடன் உறைந்திருப்பின் செல்வம்கிட்டாது; செல்வம்
 கிட்டின் தலைமகள் புணர்வு நிகழாது; மனமே! நீ பொருள்வயிற் பிரிதலைக்
 கருதி வரினும், அன்றேல் பிரிவைத் தவிர்ப்பினும் நன்றாகிய ஒன்றையே
 பற்றி அமைதியாக இரு என்றவாறு.

     "தொழுது வணங்கி" -

     தலைவியிடம் பணிவன்புகாட்டிப் பூச்சூட்டித் தொய்யில் எழுதி
 அவளழகில் ஈடுபட்டுத்தழுவிய அளவில், அவள் கண்கள் அழுது பசந்து
 சிவந்தன. ஆகவே, நாம் பிரியின் அவள் இறந்துபடுதல் திண்ணம்
 என்றவாறு.

     "சென்றே வினைமுற்றி"-

     பாலை நிலத்தே என்னையும் அழைத்து வந்து இப்பொழுது வருந்தும்
 மனமே! ஒன்று, போய்ச் செயலை முடித்துப்
      29