230                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    "பூப்புமுதல் முந்நாள் புணரார் புணரின்
     யாப்புறு மரபின் ஐயரும் அமரரும்
     யாத்த கரணம் அழியும் என்ப"                      " 43 உரை

     முழுதும்.                                           ந. அ 91

                                                             87

ஓதற்பிரிவுக்குச் சிறப்பு விதி

     460. ஓதற்கு அகன்றோன் ஒழிந்து இடைமீண்டு
         போதற்கு இயையவும் புலம்பவும் பெறாஅன்

     இஃது ஓதற்குப் பிரியும் தலைமகனால் நிகழ்த்துதற்கு ஆகாத
 செய்தி கூறுகின்றது.

     இ-ள் : ஓதற்குப் பிரிந்த தலைமகன் ஏனையோர் போல
 அவ்வோதலை ஒழிந்து இடையே மீண்டு வருதற்கு உடன் படவும்,
 அவ்விடத்துத் தலைமகளை நினைந்து புலம்பவும் தகான் என்றவாறு.     88

ஒத்த நூற்பா

     முழுதும்-                                        ந அ. 92 88

தூது-துணை வயின்பிரிவு-இவற்றிற்குச் சிறப்பு விதி

 461 தூதும் துணையும் ஏது வாகச்
     சென்றோன் அவ்வினை நின்றுநீட் டிப்புழிப்
     புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே

     இது தூதும் துணையும் காரணமாகப் பிரிந்த தலைவற்கு ஆவது
 ஒரு வேறுபாடு கூறுகின்றது.

     இ-ள் : தூது காரணமாகவும் உதவி காரணமாகவும் பிரிந்த
 தலைவன் அத்தொழில்கள் அப்பிரிவிற்கு உரிய ஓர்யாண்டின்கண்
 முடியாது நீட்டித்த காலத்து, பாசறைக் கண்ணே இருந்து வெறுத்துப்
 புலம்புதல் செய்யவும் பெறும் என்றவாறு.

     உம்மையால் புலம்பல் ஒருதலை அன்று என்க.                  89