234                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 வழி அவள் அழகு அழிவு கண்டு வருந்தலும், தலைவன் பிரிந்து சென்ற
 இடம் நோக்கிச் செல்லுதலை விரும்பலும், தலைவனிடம் தலைவிநிலையை
 உரைத்தலும், தன்னிடம் உரையாடிய தலைவன் மீண்டுவரும் நாளினைத்
 தலைவிக்குக் கூறலும், தலைவன் வந்தபின் தலைவி மகிழ்ச்சியால் திளைக்கும்
 போது தான் வந்து தலைவன் வருகையை அறியாதான்போல அதுபற்றித்
 தலைவியை வினவுதலும் பாணனுக்கு உரிய தொழில்களாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

வாயில்களுக்குப் பொது இலக்கணம்

     "கற்புறு காமமும் நற்பால் ஒழுக்கமும்
     மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
     விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
     பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
     முகம்புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
     அகம்புகல் மரபின் வாயில்கட்கு உரிய."         தொல். பொ. 152
     "மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
     தம்முள ஆதல் வாயில்கட்கு இல்லை."                    " 165
     "மனைவி முன்னர்க் கையறு கிளவி
     மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே."                    " 166
     "முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
     பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்."               " 167
     "எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
     புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப."                      " 178
     அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்
     சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர்."               " 179
     "தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏற்றலும்
     பல்லாற் றானும் ஊடலில் தணித்தலும்