தலைவனுடைய கல்விமுதலிய பிரிவின்கண் தலைவிக்கு ஆறுதல்மொழி்
கூறுதலும், தலைவனுடைய பரத்தையிற் பிரிவின்கண் தலைவியினுடைய்
புலவியைத்தீர்த்தலும், தலைவனுடைய வாயிலாகச் சென்று தலைவியின்
ஊடல் தீருமாறு வேண்டலும், ஊடல் தீர்த்து இருவரையும் கூட்டுவித்தலும்
விறலியின் தொழில்களாம்.
காண்பாருக்கு மெய்ப்பாடு தோன்றுமாறு ஆடுதலின் கூத்தி்
விறலி எனப்பட்டாள். விறல்-மெய்ப்பாடு.