242                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இ-ள் முன்வருநீதி முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவும் எல்லாம்
 தெளியச் சொல்லுதல் செவிலித்தாய்க்கும் பொருந்திய அறிவர்க்கும்
 உரியனவாம் என்றவாறு.

     பிறஆவன வாயில்வேண்டல் முதலாயின.                      100

விளக்கம்

     இல்லற நெறிமுறை, தலைவியைக் கூடுதற்குரிய நன்னாட்கள், அதனால்
 பின்னர் இல்வாழ்க்கை சிறக்கும் பெற்றி-முதலியகூறல், வாயில்வேண்டல்
 ஆகிய பலவும் செவிலித்தாய்க்கும் அறிவர்க்கும் உரியவாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

     "கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள
     நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
     செவிலிக்கு உரிய ஆகும் என்ப".               தொல். பொ. 153

     "செவிலி கிளவி அறிவர்க்கும் உரிய".                    "  154

     "இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும்
     கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்"               " 155

     "வருத்தம் மிகுதி சுட்டுங் காலை
     உரித்துஎன மொழிப வாழ்க்கையுள் இரக்கம்".             "  226

     முழுதும்-                                          ந. அ. 104

100

காமக் கிழத்தியர் தொழில்கள்

 473 குடிப்பிறந் தோரை வடுப்படுத்து உரைத்தலும்
      மனைவியைப் பழித்தலும் வாடா ஊடலுள்
      அனையவட் கழறலும் மனைவிக்கு அமைந்த
      ஒழுக்கமும் காமக் கிழத்தியர்க்கு உரிய.

     இது காமக்கிழத்தியர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.