244                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இது பரத்தையர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.

     இ-ள் தலைமகனையும் தலைமகளையும் இகழ்தல் முதலாகச்
 சொல்லப்பட்டன எல்லாம் பரத்தையர் முறைமை என்று கூறுவர் ஆசிரியர்
 என்றவாறு.

     இவற்றுள், கிழவோற் பழித்தலுக்குச் செய்யுள்:

 கோடலஞ் செங்கைநல் லார்கொங்கை ஏற்றமென் கொங்கினுடன்
 பாடலங் காவும் பருமணல் குன்றும் பயின்று நம்பால்
 ஆடலும் பாடலுங் கண்டுங்கொண் டாடுவ தன்றியன்பின்
 ஊடலும் கூடலும் உண்டுகொல்லோ பொய்கை ஊரனுக்கே.  அம்பி. 482

 எனவும்,

     தலைவியை இகழ்தற்குச் செய்யுள்:

     

     தேமே குவளையுஞ் செந்நெலுங் கன்னலுஞ் சேரநன்னர்
     ஆமேய் கழனி அகன்புனல் ஊரன் அகலமெல்லாம்
     யாமே விரும்பினம் என்றெம்மை ஏசுவர்போலத் தம்மைத்
     தாமே பழிப்பர் தலைவியர் தாமும் தனம்படைத்தே.

 எனவும்,

     பரத்தையர் தம்மைப் புகழ்தற்குச் செய்யுள்:

   

     அரியார் விழிவஞ்சி ஆயமும் தானும் அகன்துறைவாய்
     விரியார் நறுந்தொடை மன்புறம் காப்பினும் என்புறமே
     புரியா தொழிகுவ னேலழி யாத புகழ்படையாக்
     கரியார் திருவில் தரியாது உடைகஎன் கைச்சங்கமே.   அம்பி. 476

 எனவும் வரும்.

     நிகழ்பொருள்காத்தற்கு உதாரணம் வந்துழிக் காண்க              102