"திணைகாணும்"-
"தன் தனங்களால் தலைவனைத் தன்பக்கல் கவர்ச்சி செய்த காதல்
பரத்தையின் தனங்களைக்கண்டும், அவன் மார்பினைக் கைப்பற்றித் தழுவும்
ஆற்றல் அற்ற என் கொங்கைகளே! உமக்குக் கச்சினாலும்
அணிகலன்களாலும் சிறப்புச் செய்து வைத்தேமாக அந்நலன்களால் நீயிர்
மேம்படுவது தக்கதன்று" என்று சேரிப்பரத்தை தன் கொங்கைகளைப்
பழித்தவாறு.