அகத்திணையியல்-நூற்பா-108,109                           249


 

     இஃது அறிவர் ஆவார் இவர் என்கின்றது.

     இ-ள் அறிவர் என்பார் தலைமகற்கும் தலைமகட்கும் உறுதியைப்
 பயக்கும் உபதேசங்களைத் சொன்ன மேம்பட்ட குரவர் ஆவார்
 என்றவாறு.108

விளக்கம்

     "மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியின் ஆற்றிய அறிவர்"
 எனவே அவரே குரவர் ஆதற்கு உரியார் என்பதாம்.

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                          ந. அ. 112

                                                            108

காமக்கிழத்தியர் இயல்

 481 ஒருவன் தனக்கே உரிமை பூண்டு
     வருகுலப் பரத்தையர் மகளிர் ஆகிக்
     காமக்கு வரைந்தோர் காமக் கிழத்தியர்.

     இது காமக்கிழத்தியர் ஆவார் இவர் என்கின்றது.

     இ-ள் காமக்கிழத்தியர் என்பார் சேரிப்பரத்தையர் போலப் பலருக்கும்
 உரியர்அன்றி, ஒருவற்கே உரிமைபூண்டு வருகுலப் பரத்தையர் மகளிர்ஆகி,
 காமம் காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டார் என்றவாறு.109

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                          ந. அ. 113

                                                            109

காதற் பரத்தையர் இயல்

 482 யாரையும் நயவா இயல்பில் சிறந்த
     சேரிப் பரத்தையர் மகளிர் ஆகிக்
     காதலில் புணர்வோர் காதல் பரத்தையர்.

      32