மேல் கூறிப்போந்த கைகோள் இரண்டனையும் விரித்து உணர்த்துவான்
தொடங்கினவற்றுள், இது நிறுத்தமுறையானே களவு என்னும் கைகோளது
இலக்கணம் உணர்த்துகின்றது.
இ-ள் அன்பினானாய ஐந்திணையுள் களவு எனப்பட்ட
கைகோளாவது, பார்ப்பாரது அரிய நூலிடத்து மகட்கோடலாறு எட்டனுள்
கந்தருவநெறியோடு ஒப்பது என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.
அன்பாவது-