என்ப ஆகலின்.
[வேள்விக்கூடத்தில் நெய்யால் சுடர்விட்டு எரியும் வேள்வித் தீ
முன்னர்த் தன்மகளை நிறுத்தித் தான்விரும்பிய தக்கோனுக்கு அவளை
அவ்வேள்வித் தீ முன்னர்த் தானமாக வழங்குவதே தெய்வமணம் ஆகும்.]
அசுரமாவது- கொல்லேறு கோடல், திரிபன்றி எய்தல், வில்லேற்றுதல்
முதலியன செய்துகோடல்;