அகத்திணையியல்-நூற்பா-113                              257


 

 ஓட அவ்வீரச்செயலைப் புரிந்தாற்கு அம்மகளை மணம்செய்து கொடுப்பதே
 அசுரம் ஆகும்.  இஃது அரும்பொருள்வினை எனவும் படும்]

     இராக்கதமாவது-தலைமகள் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற்
 கொள்வது;

     மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர்
     வலிதிற்கொண்டு ஆள்வதே என்ப - வலிதின்
     பராக்கதம் செய்துஉழலும் பாழி நிமிர்தோள்
     இராக்கதத்தார் மன்றல் இயல்பு.              தொல். பொ. 92 ந.

     [பொற்பூண் அணிந்த நங்கையைக்கண்டு காம மயக்கம் கொண்ட
 ஆடவர் அவள்இசைவும்  பெறாது அவளை வலிதின் கைப்பற்றிக் கொண்டு
 சேறல், பிறர்பொருளைத் தம்  தோள் வலிமையால் கைப்பற்றித்திரியும்
 இராக்கதர் தம் மணம் ஆகும்.]

     பைசாசமாவது - மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும்,
 இழிந்தோளை மணம்செய்தலும், ஆடை மாறுதலும் பிறவும் ஆம்;

     எச்சார்க்கு எளியர் இயைந்த காவலர்
     பொச்சாப்பு எய்திய பொழுதுகொள் அமையத்து
     மெய்ச்சார்பு எய்திய, மிகுபுகழ் நண்பின்
     உசாவார்க்கு உதவாக் கேண்மைப்
     பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே.     தொல். பொ. 92 ந.

 எனவும்,

     இடைமயக்கம் செய்யா இயல்பனின் நீங்கி
     உடைமயக்கி உட்கறுத்தல் என்ப-உடையது
     33