ஓட அவ்வீரச்செயலைப் புரிந்தாற்கு அம்மகளை மணம்செய்து கொடுப்பதே அசுரம் ஆகும். இஃது அரும்பொருள்வினை எனவும் படும்]
இராக்கதமாவது-தலைமகள் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது;
மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர்
வலிதிற்கொண்டு ஆள்வதே என்ப - வலிதின்
பராக்கதம் செய்துஉழலும் பாழி நிமிர்தோள்
இராக்கதத்தார் மன்றல் இயல்பு. தொல். பொ. 92 ந.
[பொற்பூண் அணிந்த நங்கையைக்கண்டு காம மயக்கம் கொண்ட ஆடவர் அவள்இசைவும் பெறாது அவளை வலிதின் கைப்பற்றிக் கொண்டு சேறல், பிறர்பொருளைத் தம்
தோள் வலிமையால் கைப்பற்றித்திரியும் இராக்கதர் தம் மணம் ஆகும்.]
பைசாசமாவது - மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும், இழிந்தோளை மணம்செய்தலும், ஆடை மாறுதலும் பிறவும் ஆம்;
எச்சார்க்கு எளியர் இயைந்த காவலர்
பொச்சாப்பு எய்திய பொழுதுகொள் அமையத்து
மெய்ச்சார்பு எய்திய, மிகுபுகழ் நண்பின்
உசாவார்க்கு உதவாக் கேண்மைப்
பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே. தொல். பொ. 92 ந.
இடைமயக்கம் செய்யா இயல்பனின் நீங்கி
உடைமயக்கி உட்கறுத்தல் என்ப-உடையது 33
|
|
|
|