எனவும் கூறுப ஆகலின்,
[பொருந்திய காதலினாலே எத்தகைய சார்தலுக்கும் எளியோராகித் தாம்
விரும்பிய மகளிர் அயர்ந்த செவ்வீ பார்த்து அவர் மெய் தீண்டி இன்புறும்,
நண்பரையும் கலந்து ஆலோசியாத காமத்தொடர்பு பிசாசர் மணம் ஆகும்.
ஆடவருக்கு உரிய பெருமையும் உரனும் ஆகிய இயல்பின் நீங்கி,
இடையே மனமயக்கம் கொண்டு, தீயன செய்தற்கண் அஞ்சுதலைத்
தவிர்ந்து, பெண் உடைகண்டஅளவில் மயக்கம்கோடல், தம்மிடத்துள்ளதை
நண்பர்களின் தேவைக்கு உதவாத, என்புடம்பு உடைய பசாசம் போல்வார்
கைக்கொள்ளும் பசாசமணம் ஆகும்.]
இனிக் கந்தர்வமாவது, கந்தர்வகுமாரரும் கன்னியரும் தம்முள்
எதிர்ப்பட்டுப் புணர்வது;