அகத்திணையியல்-நூற்பா-116,117                            271


 

 இவர் விடுத்தது வியப்பைத் தருகிறது. இல்லறத்திற்கு இத்தகைய திரு
 இன்றியமையாதது என்பது,

    "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
     கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
     ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப்
     பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே".            நற் 110

 என்ற பழம்பாடலானும் உணரப்படும்.

ஒத்த நூற்பாக்கள்

      "முழுதும்"-                                   தொல். பொ.273

                                                            116

     ஐயம் ஏற்படும் இடம்

 489 மடமான் நோக்கி வடிவும் கண்ட
     இடமும் சிறந்துழி எய்துவது ஐயம்.

     இஃது ஐயம் நிகழும் இடம் உணர்த்திய முகத்தான் அதன் இலக்கணம்
 உணர்த்துகின்றது.

     இ-ள் தலைமகள் வடிவும் அவளைத் தான் கண்ட இடமும் சிறந்த
 காலத்துத "தெய்வமோ? மக்களுள் உள்ளாளோ?" என ஐயுறுவது யாம்
 மேற் கூறிய ஐயமாம் என்றவாறு.

     எனவே, அவை சிறப்புடைய அல்லாக் காலத்து இழிபு சுட்டப்படுதலான்,
 ஐயம் நிகழாது என்பதாம்; என்னை?

    "சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
     இழிந்துழி இழிபே சுட்ட லான"                 தொல். பொ. 94

 என்ப ஆதலின்.

     அதற்குச் செய்யுள்:

 போதோ விசும்போ புனலோ பணிகளது பதியோ
 யாதோ அறிகுவது ஏதும் அரிது யமன் விடுத்த