272                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
 மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே.               திரு-2

 எனவரும்.

     ஏற்புழிக் கோடலான் இங்ஙனம் ஐயுறுதல் தலைமகன் மேற்றே எனக்
 கொள்க. தலைவற்குத் தெய்வமோ என ஐயம் நிகழ்ந்தவழி அதனை நீக்கி
 நூல் முதலியவற்றான் தெய்வம் அன்மை  உணர்தற்கு அறிவுடையன்
 ஆதலானும் தலைவிக்கு முருகனோ இயக்கனோ என ஐயம் நிகழின் அதனை
 நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலான் அவட்கு அச்சமே அன்றிக்
 காமக்குறிப்பு நிகழாது ஆதலானும் என்பது.                         117

விளக்கம்  

     "போதோ விசும்போ"-

     "ஒப்பற்ற தில்லையான் இடத்துக் காணப்படும் இம்மாது வாழ்பதி
 அவ்வூரோ தாமரையோ வான்உலகமோ நீரோ நாகர்உலகமோ என்று
 அறிவது அரிது. இம்மயில் அன்ன சாயலான் இயமன் விடுத்த தூதோ
 மன்மதன் துணைவியோ என்பதும் அறிகிலம்" என்று தலைவன் தலைவியின்
 வனப்புக் கண்டு ஐயுற்றவாறு.

     தலைவன் தலைவிக்கு உரிய பத்து ஒப்புமைகளில் கல்வி ஒன்றாகக்
 கூறப்படவில்லை. சங்க இலக்கியத்தலைவி கல்வி கற்றாள் என்று அறிதற்கும்
 வாய்ப்பு இல்லை. ஆதலின் அவட்கு ஐயம் நிகழின் அதனைப்
 போக்கிக்கொள்ளும் கருவி அவளுக்கு இன்று என்பது கூறப்பட்டது.

ஒத்த நூற்பாக்கள்  

    "சிறந்துழி ...... ...... சுட்டலான"                    தொல். பொ.94
    "முழுதும்"                                          ந. அ. 120
    "எய்திய இருவருள் சிறந்தஇறை வன்மேற்று
     ஐயுறல் என்ப அறிவுடை யோரே."                    மா. அ. 8

                                                                                                                        117