274 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
விளக்கம்
உரை பெரும்பாலும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே.
தொல். பொ.95
"பாயும் விடை"-
"தெய்வமகளோ மானிடமகளோ என்று ஐயுறவோடு துயருற்று ஆராயும் மன்னே! இச்சிறுநுதலாள் ஆகிய தில்லை அன்னாளின் கண்இமைக்கும்; அடிநிலம் தோயும்;மலர் வாடும்; ஆதலின் இவள் அணங்கு அல்லள்" என்று தலைவன் மனத்தைத் தெளிவித்தவாறு.
ஒத்த நூற்பாக்கள்
"வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சம்என்று அன்னவை பிறவும் ஆங்குஅவண் நிகழ நின்றவை களையும் கருவி என்ப". தொல். பொ.95
188
குறிப்பறிதல்
491 அரிவை நாட்டம் அகத்துநிகழ் வேட்கை தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப.
இது குறிப்பு அறிதற்கு ஏதுக்கூறும் முகத்தான் அதற்கு இலக்கணம் உணர்த்துகின்றது.
இ-ள் தலைமகள் கண்ணானது அவள்உள்ளத்து நிகழா நின்ற வேட்கையினை விளங்க அறிவிக்கும் தலைமகற்கு;