எனவும் வரும்.
இவை ஒருதலைக்காமம் அல்லவேனும் புணர்ச்சி நிகழாமையின்
கண் ஆனது என்பதற்குப் பார்வை ஆனது என்று பொருள்கொள்க,
கண் என்று தனித்துக் கூறியவழி அது பன்மைச் சொல் ஆகலான்.
வழிநிலைக்காட்சி-தலைவியைக் கண்டவழி நிகழும் குறிப்புஅறிதல்.புகுமுகம்
புரிதல்-தலைமகன் நோக்கிய நோக்கு எதிர்த் தலைவி தான்சென்று புகுதல்.
"நோக்கினாள் நோக்கு" -
பெருவனப்பினை உடைய தலைவி தலைவன் நோக்கிய நோக்கிற்கு
எதிர்த் தான் நோக்கிய நோக்கம், தானேயும் தீண்டி வருத்தும் தெய்வம்
படையோடு வந்து வருந்தியதனை ஒக்கும் என்றவாறு.