அகத்திணையியல்-நூற்பா-121                              281


 

 மீதூரப்பட்ட தலைமகன் "இவள் வாய்போல நாறும் ஆம்பல் மலர்கள்
 உளவோ?" என வண்டிற்கு உரைப்பானாய் அவ்விருப்பம் கூறிச்
 சொல்கேளாத அயர்வு நீங்குதலும் நலம் பாராட்டலின்பின் வரவும் பெறும்

     கலந்துழி மகிழ்தல்:

    "சொற்பால் அமுதுஇவள் யான்சுவை என்னத் துணிந்து இங்ஙனே
     நற்பால் வினைத்தெய்வம் தந்தன்று நான்இவ ளாம்பகுதிப்
     பொற்புஆர் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பின்
     கல்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே"

திருக்கோவை. 8 

 எனவும்,

     [சிவபெருமானது பொதியமலையில் கல் பரந்த தாழ்வரையில் ஆயத்தின்
 காவல் நீங்கிய இக்களவில், அமுதும் அதன்சுவையும் போலப் பிரித்தல்
 இயலா நிலையினேமாகி, யாம், இக் காம இன்பம் நுகரத் தலைவன் எனவும்
 தலைவி எனவும் ஆயினேமாகத் தெய்வம் இவ்வாய்ப்பை அருளி உள்ளது.]

     நலம் பாராட்டல்:

 "உணர்ந்தார்க்கு உணர்வுஅரியோன்தில்லைச் சிற்றம்பலத்து ஒருத்தன்
  குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்வாய்இக் கொடிஇடைதோள்
  புணர்ந்தால் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
  மணம்தாழ் புரிகுழ லாள்அல்குல் போல வளர்கின்றதே"

திருக்கோவை. 9 

     [சிவபெருமானுடைய குணமாகிய ஆனந்தம் வெளிப்பட்டாற்
 போல்வாளாகிய இக் கொடியிடையாள் தோள்களைப் புல்லுந்தோறும்
 பேரின்பம் முன்பு போலப் பின்னும் புதிதாய், இவள் அல்குல் போல
 வளர்ந்து, என்றும் ஒரே படியதாய் நிறைவுறுகின்றது.]

      36