"அளவியை யார்க்கும் அறிவுஅரி யோன்தில்லை அம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின்
பிளவுஇயல் மின்இடை பேர்அமை தோள்இது பெற்றிஎன்றால்
கிளவியை என்னோ இனிக்கிள்ளை யார்வாயில் கேட்கின்றதே"
["அளத்தற்கரிய சிறப்பினனாகிய சிவபெருமான் தில்லை அம்பலம் போலக் கொங்கைகள் வளவியன்; கண்கள் வாள் போன்றன; நுதல் பிறை போன்றது; இடை மின்னல் போன்றது; தோள் அமை போன்றன; இவள் மொழி கிளிமொழி போலும்; இவள் பேச்சைக் கேட்க விரும்புவது என்னே?" என்று தலைவன் தன்மனத்திடம் சொற்றது.]
சொல் கேளாத அயர்வு நீங்கியது;
"கூம்பல்அம் கைத்தலத்து அன்பர்என்பு ஊடுஉரு கக்குனிக்கும்
பாம்புஅலங் காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பல்அம் சிற்றிடை ஈங்குஇவள் தீங்கனி வாய்கமழும்
ஆம்பல்அம் போதுஉள வோஅளி காள்நும் அகன்பணையே"
[வண்டுகளே! நும் அகன்ற மருத நிலத்தில், சிவபெருமானுடைய அம்பலத்தைப் பாடாதரைப் போல வாடும் இச்சற்றிடையாளது வாய்போல நறுமணம், வீசும் ஆம்பற் பூக்கள் உளவோ?]
ஏற்புற அணிதல்:
"தூசும் கலையும் தொலையா அழகுஎறிக் கும்தொடியும்
வாசம் கமழும் மதுமலர் ஓதியும் வண்களபம்
பூசும் கனதனம் பூணும் முத்தாரமும் பூங்குழையும்
ஆசும் பழுதில்பொன் னேபண்டு போல அணிந்தனமே"
|
|
|
|