அகத்திணையியல்-நூற்பா-123                              289


 

 விளையாடிச் சுனையில் படியாது பொம்மையைப் போல இடம் பெயராது
 நிற்பதன் காரணத்தைக் கூறுவாயாக" என்று தலைவன் தலைவியை
 வினாயது.]

      மருங்கு அணைதல்:

    "கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்கு அஃதே குறைப்பவர்தம்
     சீலத் தன கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள்
     நூல்ஒத்த நேர்இடை நொய்மைஎண் ணாது நுண் தேன்நசையால்
     சாலத் தகாது கண்டீர் வண்டு காள் கொண்டை சார்வதுவே".

 எனவும்,                                        திருக்கோவை. 45 

     ["வண்டுகளே! அழகிய தனிக்கிளைமேல் அமர்ந்து அதனையே
 வெட்டுவாரைப்போன்ற பண்புடைய கொங்கைகள் என் அறிவுரைகளை
 ஏலா; சிவபெருமானுடைய தில்லையை ஒத்த இந்நங்கையின் நூல்போன்ற
 இடையின் நொய்மையைக் கருதாமல், மயிர்முடிமேல் அமர்ந்து பாரத்தை
 மிகுவிப்பது உங்களுக்கு ஏற்றது அன்று" என்று தலைவன்
 வண்டினங்களிடம் சொற்றது.]

     மெய்தொட்டுப் பயிறல்:

     "உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
     அமிழ்தின் இயன்றன தோள்."

குறள் 1106 

 எனவும் வரும்.

    "அளகம் திருத்தி, மதிநுதல் நீவி, அளிஅகற்றிப்,
     புளகம்செய் தோளில் புரிவளை ஏற்றிப் புதியதென்றல்
     கிளரும் கொழுந்தளிர் மெல்லடி தைவந்த இன்பம்உறக்,
     களபம் செறிதனத் தாய்!பெற்ற வாஎன் கரதலமே".

அம்மி-31 

 இதுவும் அது.

     [யான் தழுவும் தோறும் என் உயிர் புதுக்கிளர்ச்சி பெறுமாறு
 செய்வதால், இத்தலைவியின் தோள்கள் அமிர்தத்தால் இயன்றனவாம்.
       37