292                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [தன்னை வணங்கினவர் முடிகளைத் திருவடிக்கண் கொண்டு அவரைத்
 தேவரும் வணங்குமாறு செய்யும் சிவபெருமானுடைய அம்பலத்தை
 வணங்காதவர்களைப் பால மனம் வருந்துமாறு அதனைப் பிளக்காமல்,
 கண்களைப் பொத்திக் கொண்ட நீ உடல் முழுவதையும் மறைத்துக்கொள்;
 அப்போது என் துளக்கம் தீர்த்து என்னை வாழச் செய்தாய் ஆவாய்.]

     நீடு நினைந்து இரங்கல்:

     "காதல் மடந்தையர் கைஅகல் காலையும் மெய்அகலா
     மேதகுநாணும் மெலியஅன் றோவிழி போலும்நெய்தல்
     போதுஅவிழ் மென்மலர்ப் புன்னையங் கானல் பொருந்துமிந்த
     மாதவி பெற்ற மணிமே கலைநம்மை வாழ்விப்பதே".

அம்பி. 36 

 எனவும்,

     ["விழி போன்ற நெய்தல் மலரும் புன்னையங்கானலில் பொருந்திய
 மாதவியாம் கொடியைச் சார்ந்த மணிமேகலை அணிந்த தலைவி,
 மகளிர்க்குச் செயலற்ற காலத்தும் உடலை விட்டு நீங்காத நாணம்
 மெலிதலினால், நம்மை வாழ வைப்பவள் ஆவாள்" என்று
 தலைவன் சிறிதுஆறுதல் உற்றவாறு]

     மறுத்து எதிர்கோடல்:

     "குருநாள் மலர்ப்பொழில்சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
     வருநாள் பிறவற்க வாழிய ரோமற்றுஎன் கண்மணிபோல்
     ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன்வளர்ந்த
     அருநாண் அளிய அழல்சேர் மெழுகுஒத்து அழிகின்றதே".

திருக்கோவை. 44 

 எனவும்,

     [என் கண்மணிபோன்று சிறந்ததாய் ஒருநாளும் என்னை விட்டு நீங்காது
 உயிர்போல அரியதாய் என்னுடன் வளர்ந்த அருமையான நாணம்,
 இப்பொழுது நெருப்பைச் சார்ந்த