மெழுகுபோல உருகி ஓடுகின்றது. சிவபெருமானை வழிபடாதவர் மீண்டும் பிறப்பார் அல்லரோ? அவர்களைப்போல, எதிர்காலத்தில் நான் இவ்வாறு நாணத்தை விடும் பிறப்பு எடுக்கும் நிலையைப் பெறாது ஒழிவேனாக.]
"பூணும் தரள நிரைஅவிர் தோற்றமும் பூந்தளவின்
சேணும் கமழும் முகையும் தகையும் செழுஞ்சிலம்பின்
காணும்கலப மயில்நெடும் பீலியின் காலும் சிந்தை
நாணும் கெடவறி தேநகைசெய் தாள்மதி வாள் நுதலே".
[பிறைநுதலினாள், முத்தும் முல்லைமுகையும் மலையிற் காணும் மயில் இறகின் அடியும் வெண்ணிறம்கண்டு தோற்குமாறு புன்முறுவல் செய்தாள்.]
முறுவல் குறிப்பு உணர்தல்:
"முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு".
"மிகலே ஒழியக் குறைவுஅற நீடிய வெம்துயர்க்குஓர்
புகல்ஏதும் இன்றிப் புலம்பல்நெஞ் சேபொருந் தார்வருந்த
இகலே செயும்அயில் அன்னகண் ணாள்முகத்து எல்லிஅன்றிப்
பகலே நிலவும் பவளத்துள் ளேவந்து பாரித்ததே".
[மொட்டிற்குள் மணம் பொதிந்து இருப்பதுபோல, இவள் புன்முறுவலுள்ளும் உடன்பாட்டுக்குறிப்பு மறைந்து நிற்கின்றது. |
|
|
|