கணந்தோறும் மிக்குக் குறைதல் அறியாத துயர்தீரப் போக்குவீடு இன்றி, நெஞ்சே! நீ தனிமைத் துயர் உறாதே; வேற்கண்ணாளாகிய தலைவியின் முகமாகிய சந்திரனில் இரவில் அன்றிப் பகற்பொழுதும் பவளவாய்வழியே பற்களின் ஒளியாகிய நிலவும் வெளிப்பட்டுவிட்டது)
"வானக் கதிரவன் மண்ணக மாதை மணந்தது ஒக்கும்
நானக் குழலியை நான்இன்று பெற்றது நாவலர்க்குத்
தானக் களிறு தரும்புயல் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
கானக் கடிவரை வாய்விரை நாள்மலர்க் காவகத்தே".
[புலவருக்கு யானைகளைப் பரிசில் நல்கும் கார்மேகம் போன்ற கொடை உடைய வாணனுடைய தஞ்சையைச் சூழ்ந்த மலைச்சோலையில் இத்தலைவியை நான் இன்று பெற்ற செயல், வானத்திலுள்ள சூரியன் பூமியிலுள்ள பெண்ஒருத்தியை அடைவது போன்ற செயற்கரிய செயலாகும்.]
"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணேஉள". குறள். 1101
[ஐம்பொறிகளுக்கும் உரிய ஐம்புல இன்பங்களும் இத் தலைவியிடத்து ஒருசேர நுகரக் கிடைப்பனவாய் உள்ளன]
"திரள்மா மரகதச் செய்குன்று காள்என்றும் செவ்வனம்நீர்
முரண்மா தவங்கள் முயன்றுசெய் தாலும் முளரிமங்கை
சரண்மாறை வாணன் தமிழ்த்தஞ்சை நாட்டுஎன் தனிஉயிர்க்குஓர்
அரண்மான் அனையகண் ணாள்கொங்கை போறல் அரிதுஉமக்கே.
தஞ்சை. 19
|
|
|
|