298                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    "அணிந்தமை கூறல் அறநயப்பு உரைத்தல்
     பணிந்துஎழு தெய்வப் பான்மை உணர்த்தல்
     பிரியேன் என்றல் பிரிந்துவருகு என்றல்
     இடம்அணித்து என்றல் இருபதமும் வேண்டல்
     உடன்ஏழ் வன்புறைக்கு உரித்துஎனும் விரியே".

மா. அ. 21]  

     அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல்:

    "நாவியும் கார்அகில் ஆவியும் தோய்குழல் நாணிஅஞ்சேல்
     வாவியும் சோலையும் சூழ்தஞ்சை வாணன்தென் மாறைவயல்
     காவியும் சேலும் கமலமும் காட்டும்நின் கண்மலரும்
     ஆவியும் போலஇனி யார்அணி யாக அணிந்தனமே"

தஞ்சை. 20 

 எனவும்,

     [புழுகும் அகிற்புகையும் தோய்ந்த குழலை உடையாய்! வாவியும்
 சோலையும் சூழ்ந்த தஞ்சைவாணனுடைய மாறை நகர் சூழ்ந்த
 வயலிடத்துள்ள காவியும் கயலும் போன்ற நின் கண்களும் உயிரும்
 போன்று இனிய தோழியர் அணியுமாறு நினக்கு அணிசெய்துள்ளேன்
 ஆதலின், நாணம் உற்று அஞ்சாதே]

     பெருநயப்பு உரைத்தல்:

    "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
     காமம் செப்பாது கண்டது மொழிமோ
     பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்
     செறிஎயிற்று அரிவை கூந்தலின்
     நறியவும் உளவோ நீ அறியும் பூவே".

 எனவும் வரும். இது குறுந்தொகை. (2)  

     [நறுமணத்தை ஆராய்தலையே வாழ்க்கைத் தொழிலாக உடைய
 வண்டே! என் நிலத்து வண்டு ஆகையால், என் மாட்டு வாரம் வைத்துக்
 கூறாது உண்மையைச் சொல்;