அகத்திணையியல்-நூற்பா-125                              299


 

 பொருந்திய நட்பினையும், மயில் இயலினையும், செறிஎயிற்றினையும் உடைய
 இத்தலைவியின் கூந்தலைவிட மணம் கமழும் பூக்களாக நீ அறிந்தன
 உளவாயின் கூறு.]

     தெய்வத்திறம் பேசல்:

    "தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வார்திருவே
     யாவரில் பெற்றுஇனி யார்சிதைப் பார்இமை யாதமுக்கண்
     மூவரில் பெற்றவர் சிற்றம் பலம்அணி மொய்பொழில்வாய்
     பூஅரில் பெற்ற குழலிஎன் வாடிப் புலம்புவதே".

திருக்கோவை. 14 

 எனவும்,

     [இமையாத முக்கண்களைச் சூரியன் சந்திரன் செந்தீக் கடவுள்
 இவர்களால் பெற்ற சிற்றம்பலவனின் பொழிற்கண், மணமலர் சூடிய
 கூந்தலை உடையாய்! முயற்சியும் உளப்பாடும் இன்றித் தேவராலே பெற்ற
 நம் அழகிய மணத்தை வாய்ப்புப்பெற்றுச் சிதைப்பார் ஒருவரும் இரார்;
 ஆதலின் நீ வாடித் துன்புறுதல் வேண்டா.]

     பிரியேன் என்றல்:

    "சிந்தா மணிதெண் கடல்அமு தம்தில்லை யான்அருளால்
     வந்தால் இகழப் படுமே மடமான் விழிமயிலே
     அந்தா மரைஅன்னமேநின்னை யான் அகன்று ஆற்றுவனோ
     சிந்தா குலம்உற்றுஎன் னோஎன்னை வாட்டம் திருத்துவதே

திருக்கோவை. 12 

 எனவும்,

     [மான் விழியை உடைய மயில்போல்வாய்! திருவே! சிந்தாமணியும்
 அமுதமும் இறைவன் அருளால் கிடைக்கப் பெறின், அவை பெற்றவனால்
 இகழப்படுமோ? அவற்றை ஒத்த சிறப்புடைய நின்னை யான் பிரிந்து
 ஆற்றியிரேன். ஆதலின் நீ மனம் மயக்கம் உற்று என்னைவாட்டுவது ஏன்?]