இன்றியமையாமை எடுத்து உரைத்தல்:
"நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்அமிர் தும்செழுந் தேனும் பொதிந்து செப்பும்
கோங்குஅரும் பும்தொலைத்துஎன்னையும் ஆட்கொண்டகொங்கைகளே
[இன்றியமையாமை எடுத்துஉரைத்தல் - தலைவி தனக்கு என்றும் நீங்கத்தகாத தேவையுடையவள் என்பதைத் தலைவன் கூறுதல்.
சிவபெருமானுக்கு உரிமையான தேவர்உலகமும் இவ்வுலகமும் கிடைப்பதாயினும் கரும்பும் அமிர்தும் தேனும் பொதிந்து, சிமிழும் கோங்கு அரும்புமாகிய இவற்றை ஒத்த வடிவினவாய் என்னைத் தம் வசப்படுத்திய இத்தலைவியின் கொங்கைகளை மறவேன்.]
"மெல்லியல் அரிவைநின் நல்அகம் புலம்ப
நின்துறந்து அமைகுவென் ஆயின் என்துறந்து
இரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுஉறு தகவே".
எனவும் வரும்.
இது குறுந்தொகை.(137)
[தீராத்தோற்றம் - எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணம் ஆகிய சூளுறுதல்.
தலைவியே! நின்மனம் வருந்த நின்னைப் பிரிந்து யான் கவலையற்று இருப்பின், என் வாழ்க்கையில் என்னை நீத்து இரவலர்கள் என்வீட்டிற்கு வாராத நாள்கள் பலவாகுக.]
|
|
|
|