வாய்ப்பினம். அது எம்மோடு பேசும்; மென்மையாக நடக்கும், நுண்ணிய இடையினையும், குளிர்ந்து நோக்கும் பார்வையினையும் பெருந் தோள்களையும் உடையது அது]
"தென்பார்த் திலகம்அன் னான்தஞ்சை வாணன்தென் மாறைமுந்நீர்
வன்பால் திரள்முத்தம் வண்டலின் மேல்வரும் ஏதம்அஞ்சி
முன்பார்த்துஎன் நெஞ்சம் வழிபார்த்து ஒதுங்க முறைமுறைதன்
பின்பார்த்து ஒதுங்குதல் காண்வல வாஒரு பெண்அணங்கே."
[பாகனே! ஒரு பெண் அணங்கு தஞ்சை வாணன் மாறையிலே கடல்அலை தன் வண்டலை அழித்து விடுமோ என்று முன் பார்த்து, பின்னே தொடர்ந்துவரும் என் நெஞ்சம் வரும் வழியைப் பின் பார்த்துச் செல்லுதலைக் காண்.]
500 மருள்உற்று உரைத்தல் தெருள்உற்று உரைத்தல்என்று
இருவகைத்து ஆகும் பிரிவுழிக் கலங்கல்.
இது பிரிவுழிக் கலங்கலின் வகை இத்துணைத்து என்கின்றது.
இ-ள் மருள்உற்று உரைத்தலும் தெருள்உற்று உரைத்தலும் என இரண்டு வகையினை உடைத்தாம் பிரிவுழிக் கலங்கல் என்றவாறு.
மருள்உற்று உரைத்தல் - மனம் மயக்கம்உற்றுக் கூறுதல்; தெருள்உற்று உரைத்தல் - மனத்தில் தெளிவுபெற்றுக் கூறுதல். இதனைப் "பிரிந்தவழிக் கலங்கல்" (தொல். பொ. 102) என்னும் தொல்காப்பியம்.
|
|
|
|