அகத்திணையியல்-நூற்பா-129                             307


 

ஒத்த நூற்பாக்கள்  

      முழுதும் -                                       ந. அ. 133 

    "புனம்மயில் சாயலை ஆயம் போற்றலின்
     கனவுகொல் என்றலும் வாயில் காண்டலும்
     பண்புபா ராட்டலும் பயந்தோர்ப் பழிச்சலும்
     காதுஅடர் கண்படை பெறாது கங்குல்
     நோதலும் பிரிவுழிக் கலங்கல்விரி நோக்கம்"

.மா. அ. 25] 

     ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல்:

 "புணர்ப்போன்நிலனும்விசும்பும் பொருப்பும் தண்பூங்கழலின்
 துணர்ப்போது எனக்குஅணிஆக்கும் தொல்லோன் தில்லைச்
                                      சூழ்பொழில்வாய்
 இணர்ப்போது அணிகுழல் ஏழைதன்நீர்மை இந்நீர்மை என்றால்
 புணர்ப்போகனவோபிறிதோ அறியேன்புகுந்ததுவே".

திருக்கோவை. 17 

 எனவும்,

     [மண்ணும் விண்ணும் மலைகளும் படைக்கும் பெரியோன் ஆயினும்
 தன் திருவடிகளை என் முடிமணியாக்கும் எளிமையுடைய பெருமானது
 தில்லைப் பொழிலில், இத் தலைவியின் பெருமை இத்தன்மைத்தாயின்,
 இவளை யான்பெற்றது மாயமோ! கனவோ! இரண்டுமன்றி வேறொன்றோ!
 இன்னது என்று அறியேன்.]

     வாயில் பெற்று உய்தல்:

 "உயிர்ஒன்று உளமும்ஒன்று ஒன்றே சிறப்புஇவட்கு என்னொடுஎன்னப்
  பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
  செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
  பயில்கின்ற கூத்தன் அருள்எனல் ஆகும் பணிமொழிக்கே"

 எனவும்,                                         திருக்கோவை. 17

     [திரிபுரங்களை அழித்த தில்லைக்கூத்தன் அருளேவடிவாக வந்த
 தலைவியின் காதளவும் நீண்ட படைக்கண்கள், தலைவியாகிய தன்னோடு
 தோழியாகிய அவளுக்கு உயிரும் ஒன்று, மனமும் ஒன்று, இருமுது குரவரால்
 செய்யப்படும் சிறப்பும் ஒன்று என்பதைத் தெரிவிக்கின்றன.]